×

சாலையோர குப்பைகளை கொளுத்தியபோது தீப்பிடித்து எரிந்த பழமையான மரம்

திருவள்ளூர், ஜன. 31: திருவள்ளுர் அடுத்த காக்களூர் அப்பாசாமி சாலையில் குப்பைகளை மர்ம நபர்கள் எரித்ததால் அருகில் இருந்த பழமையான மரமும் தீயில் எரிந்தது. தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டு தீயை அணைத்தனர்.
குப்பைகள் தீயிட்டு எரிக்கப்படுவதால் அருகில் உள்ள மரங்களும் தீயில் எரிந்து பட்டுப்போய் வருகின்றன. இது ‘இயற்கை அன்னையை தீயிட்டு எரிப்பதற்கு சமம்’ என்கிறார்கள் இயற்கை ஆர்வலர்கள்.இந்நிலையில் திருவள்ளூர் அடுத்த காக்களூர் பூங்கா நகர் அப்பாசாமி சாலையில் மரத்தடிகளில் குப்பைகள் கொட்டப்பட்டு இருந்தது. அதை மர்ம நபர்கள் நேற்று தீயிட்டு எரித்துள்ளனர். இந்த தீ மரத்திற்கும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அருகில் வசிப்பவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும், மரமானது சாலையில் விழும் அபாயம் ஏற்பட்டது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் திருவள்ளூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைத்ததால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது. இனியாவது, குப்பைகளை தினசரி அகற்றவும், தீயிட்டு எரிக்கும் நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED முதலமைச்சர் மாநில இளைஞர் விருது பெற மே...